Tuesday, September 29, 2009

எழுத்தேணி அறக்கட்டளை

எழுத்தேணி அறக்கட்டளை என்பது எழுத்தை(கல்வியை) ஏணியாகக் கொண்டு இந்தச் சமுதாயத்தை மனித நேயம் கொண்ட அறிவார்ந்த சமுதாயமாக மாற்றியமைக்க வேண்டும் என்னும் உயரிய நோக்கத்திற்காக 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

உண்மையான கல்வியைக் கற்பிப்பது, உலகத்தின் உன்னதத் தொழிலாம் உழவுத் தொழிலை, வேளாண்மையைப் போற்றுவது, அதனை ஆதாரமாகக் கொண்டு, அதன்வழி மனிதத்தை வளர்ப்பது, மனிதத்தைப் போற்றச் செய்வது, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது, போன்றவை எழுத்தேணி அறக்கட்டளையின் குறிக்கோள்களாகும்.